Monday, May 7, 2012

காமாந்தகி . . .

மோகவலைப்பின்னல்களினூடே 
மெதுவாய் நகர்ந்து வருகிறாய்.
சிக்கித்தவிக்கும் என்னில் 
மிச்சமிருக்கும் காமத்தையும் 
உறிஞ்சிக்குடித்துவிடு. 
பூக்களின் நிறங்களிலாய்
மயங்கித்திரிந்த வாழ்க்கையும் 
உண்ட தேனின் தித்திப்பும் 
இனி
ஒருங்கே நுழையட்டும் 
அடர்ந்த இருளின் 
நிறமின்மைக்குள்.

,..

அலை . . .

அடிவாரங்களில் 
ஒலியெழுப்பிச்செல்லும்
ரயில் வண்டியை 
அமைதியாய்ப் பார்த்திருக்கிறது 
யானை வடிவக் குன்று.

,..

நனைதல் பொருட்டான மழை . . .

உனது பெயரின் கவிதை 
திறக்கப்பார்க்கிறது 
அடைபட்டுக்கிடக்குமோர் 
மிருகத்தின் கூண்டை.

,..




Friday, May 4, 2012

சிறகுள்ள கவிதை

புதிதாய்ப் பிறக்கும் 
குழந்தைகளிடம்  எல்லாம் 
கொடுத்தனுப்பப்படுகின்றன 
ஓராயிரம் வார்த்தைகள்.
பின் 
மௌனம் பழகும்  
ஒவ்வொரு பொழுதிலும் 
வார்த்தை சேர்த்து விளையாடும் 
சின்னக்கைகளுக்குள் 
சிறகு வளர்க்கின்றன 
பின்னொரு பொழுதின் 
கவிதைகள்...

,..

ம்...

ம் என்று சொல்லி 
அதை ஓர் சொல் என்கிறாய் 
ம் என்ற சொல்லில் துவங்கி 
ம் என்றே முடியட்டுமோ என் கவிதையும்,
ம்?


---