Monday, November 16, 2009

இப்படியும் ...

ராத்திரியில் ஊளையிடும்
அடுத்த தெரு நாய்
யாருடைய மரண செய்தியையோ
அறிவிப்பதாய் சொன்னாள் அம்மா .

அடுத்த நாள் காலையில்
அதே நாய்
நடுரோட்டில் அடிபட்டு
செத்துக்கிடந்ததை பற்றி
அவளிடமெதுவும் சொல்லவில்லை நான்.

.,