Thursday, July 29, 2010

ஒரு ஊரில் ஒரு கடல் ...

கடலோடிக்கிடந்த நினைவுகள்
கரை சேர்ந்த கதையறிந்து
பார்க்க வந்திருந்தாய்...
ஆர்ப்பரித்துத் தணிகின்றது,
அலைசூழ் கடல்...

,..

Wednesday, July 21, 2010

நாளைய கதை

நிதி காக்கும் பூதத்தின் கதையை கேட்க
கண்மூடி அமர்ந்திருக்கிறாய்.
உன் இமை காக்கும் கண்களின் கதையை
வேறொரு நாள் சொல்லப்போகிறேன்.

,..

மழை பெய்யும் தெரு

நனைந்திருக்கும் வீடுகளின்
அழைப்புமணியிசைத்து
வாசற்கதவு மற்றும் ஜன்னல்கதவுகளை
திறந்து வைக்கச்சொல்லுங்கள்.
கொஞ்சம் உள்ளுக்குள்ளும் பெய்யட்டும்
மழை.
,..

Monday, July 5, 2010

மழைப்பேச்சு...

ஒரு மழை
பெய்து தீரும் வரை
பேசியிருக்கலாம் என்றாய்.
அந்திச்சூரியன்
எதிர்வானில் தெளிக்கும்
நிறக்கூட்டத்திற்கு அப்பால்
தெளியத் துவங்கியன
மழை மேகங்கள்.

,..