Wednesday, October 24, 2012

இழை-மறை . . .

எப்பொழுது வீழ்வேன் 
கொத்தித்தின்னலாம் என 
வட்டமிட்டுப்பறக்கிறாய்.

இழைந்திழைந்து 
வாழ்ந்தாகி விட்டது 
கொஞ்சம் நிமிர்ந்து நிற்க விடு. 

,..

Sunday, October 14, 2012

இல்லையா?

சேர்ந்திசை ஒன்றின் 
இரு வேறு ஸ்வரங்களிலாய் 
இசைந்து கிடக்கிறோம். 
இசைத்திருக்கும் கணங்கள் முக்கியம் 
என்கிறேன் நான். 
இசையும் முக்கியம்
என்கிறாய் நீ.
இனி, 
அந்த ஒற்றைப்பாடலை 
நீ பாடினால் என்ன,
நான் பாடினால் என்ன,
இருவருமே பாடாமல் 
இருந்தாலும் என்ன?

,..

Friday, October 12, 2012

கண்-கூடு

கூடடைந்த பறவைகள்     
பறந்து திரிவதற்கான வானம்    
எதுவென்கிறாய்.

உன் கண்களை நிறைத்திருக்கும் 
கனவுகளில் மிதந்தபடி 
புன்னகைத்து வைக்கிறேன்.

,..