Wednesday, May 19, 2010

மழையிடை...

தேநீர் இடைவேளையில் பெய்த மழை
பார்த்திருக்க முடிவதில் சந்தோஷப்படுகிறார்கள்
வறட்டு பூமி நனைந்தும் சிலிர்ப்பதில்லை

,..

எம் தேவி

உறையும் புன்னகைகள் நிறைந்திருக்கின்றன
என் வெளியெங்கும்
ஒரு வார்த்தை சொல்
உருகி கரைந்து போகட்டும் அத்தனையும் ...

Wednesday, May 12, 2010

புரிதல் கொல்

புரிந்து கொள்ளாதவர்களின் மத்தியில்
நமது புரிதல் கூட
அர்த்தமற்றுப்போவது
வியப்பாயிருக்கிறது

,..