இருளடர்ந்த சாத்தியங்கள் குறித்து
இதுவரை
எதுவும் பேசாமலே இருந்துவிட்டோம்.
வெளிச்சம் போலும் வாழ்வு
என்னும்
வெற்று நம்பிக்கையில் இன்னும்
எத்தனை நாள் ஓடப்போகிறது
வண்டி.
,..
Wednesday, January 6, 2010
ஒரு பறவையும் நிறைய வானங்களும்
மோகம் கொண்டலையும்
மனதின் பள்ளத்தாக்குகளில்
பறந்து திரியும் பறவைக்கு
வெளிச்சமும் வானமும்
வேறு வேறுதான்
,..
மனதின் பள்ளத்தாக்குகளில்
பறந்து திரியும் பறவைக்கு
வெளிச்சமும் வானமும்
வேறு வேறுதான்
,..
Tuesday, December 8, 2009
Monday, November 16, 2009
இப்படியும் ...
ராத்திரியில் ஊளையிடும்
அடுத்த தெரு நாய்
யாருடைய மரண செய்தியையோ
அறிவிப்பதாய் சொன்னாள் அம்மா .
அடுத்த நாள் காலையில்
அதே நாய்
நடுரோட்டில் அடிபட்டு
அடுத்த தெரு நாய்
யாருடைய மரண செய்தியையோ
அறிவிப்பதாய் சொன்னாள் அம்மா .
அடுத்த நாள் காலையில்
அதே நாய்
நடுரோட்டில் அடிபட்டு
செத்துக்கிடந்ததை பற்றி
அவளிடமெதுவும் சொல்லவில்லை நான்.
அவளிடமெதுவும் சொல்லவில்லை நான்.
.,
Tuesday, October 20, 2009
இருத்தல் - சில குறிப்புகள்
அன்பு பாசம்
காதல் நேசம்
என
அத்தனை பேரிட்டு
அழைத்த பின்பும்
ஒருவர் மற்றவருடனான
உறவுகளில்
அனைவரது பயமும்
அவரவர்களை குறித்தானதாகவே
இருக்கிறது...
Saturday, October 10, 2009
அடுத்த கதை
முழுக்கதையையும் கேளாமல்
நீயாய் எடுத்த
முடிவுகளுக்குப் பின்னால்
அலைந்து திரிகின்றன
என் அத்தனை கதைகளும்...
.,
Monday, October 5, 2009
கதை சொல்லல்
ஆளுக்கொரு கதை சொல்லி
அதை உண்மைக்கு அருகில்
நிறுத்தப் பார்க்கிறோம்.
உண்மையோ
ஏதொன்றிலும் நிலைபெறாமல்
அலைந்து திரிகிறது.
நிற்க வைத்த கதைகள்
நின்றபடி இருக்க
ஒருபொழுது மறுபொழுதாகையில்
ஒரு வாழ்க்கை தூரம்
தள்ளி நிற்கும் உண்மை.
நாம் சொன்ன கதைகளைப்
பிறர் நம்புவதைக் காட்டி
நம்மையும்
நம்பச்சொல்வார்கள் இனி.
கதைகளின் வாசனை
நிரம்பி நிற்கும் வெளியில்
உண்மையைப் பற்றிக் கவலைப்பட்டு
என்ன ஆகப்போகிறது.
Subscribe to:
Posts (Atom)

