Monday, February 20, 2017

மயன்

முதலில் எழுந்து சென்றது
வார்த்தைகள்தான்
அதற்குப் பின்னால்
அர்த்தங்களும்.
அவற்றையொட்டியே
கவிதையின் மரணம்
நிகழத்தொடங்கியது.
பின்னொருபொழுதில்
மயன் அவற்றுடன்
ஓடிப்பிடித்து விளையாடி
ஒவ்வொரு வார்த்தைகளாய்
உள்ளழைத்து வர
அர்த்தங்களும் பின்தொடர்ந்தன.
ஒரு பெருங்கவிதையும்
உயிர்த்தெழுந்திருந்தது.

,..

No comments: