Monday, February 20, 2017

மயன்

முதலில் எழுந்து சென்றது
வார்த்தைகள்தான்
அதற்குப் பின்னால்
அர்த்தங்களும்.
அவற்றையொட்டியே
கவிதையின் மரணம்
நிகழத்தொடங்கியது.
பின்னொருபொழுதில்
மயன் அவற்றுடன்
ஓடிப்பிடித்து விளையாடி
ஒவ்வொரு வார்த்தைகளாய்
உள்ளழைத்து வர
அர்த்தங்களும் பின்தொடர்ந்தன.
ஒரு பெருங்கவிதையும்
உயிர்த்தெழுந்திருந்தது.

,..