Saturday, February 17, 2018

மிகைநிறை

ஒரு டீ பருகும் நேரம்தான்
ஆகிறது
ஒரு கவிதை எழுதுவதற்கும்

ஒவ்வொரு மிடறாய் பருகுவது போலும்
வந்து விழும்
ஒவ்வொரு வார்த்தையும்

பருகியபின் மிஞ்சும்
காலிக்கோப்பையாய்
அமர்ந்திருக்கும்
ஒரு கவிதை

,..