Friday, October 4, 2013

இடம் பொருள் கடல் ...

அலைகளின் நடுவே
கடல் எழுதிய
கவிதைகளின் அர்த்தங்கள்
நுரையாய்க் கரையொதுங்க
மணல் வீடு கட்டி
அமர்ந்திருக்கும் சிறுமி
அந்நுரையை அள்ளி
சிறு வாசலில் கோலமிடுகிறாள்.
ஒவ்வொரு கவிதையாய்
அவளது வீட்டிற்கு
இடம் மாற்றி
ஆர்ப்பரிக்கிறது கடல்.

,..

No comments: