Sunday, October 14, 2012

இல்லையா?

சேர்ந்திசை ஒன்றின் 
இரு வேறு ஸ்வரங்களிலாய் 
இசைந்து கிடக்கிறோம். 
இசைத்திருக்கும் கணங்கள் முக்கியம் 
என்கிறேன் நான். 
இசையும் முக்கியம்
என்கிறாய் நீ.
இனி, 
அந்த ஒற்றைப்பாடலை 
நீ பாடினால் என்ன,
நான் பாடினால் என்ன,
இருவருமே பாடாமல் 
இருந்தாலும் என்ன?

,..

No comments: