Monday, May 7, 2012

காமாந்தகி . . .

மோகவலைப்பின்னல்களினூடே 
மெதுவாய் நகர்ந்து வருகிறாய்.
சிக்கித்தவிக்கும் என்னில் 
மிச்சமிருக்கும் காமத்தையும் 
உறிஞ்சிக்குடித்துவிடு. 
பூக்களின் நிறங்களிலாய்
மயங்கித்திரிந்த வாழ்க்கையும் 
உண்ட தேனின் தித்திப்பும் 
இனி
ஒருங்கே நுழையட்டும் 
அடர்ந்த இருளின் 
நிறமின்மைக்குள்.

,..

No comments: