Friday, May 4, 2012

சிறகுள்ள கவிதை

புதிதாய்ப் பிறக்கும் 
குழந்தைகளிடம்  எல்லாம் 
கொடுத்தனுப்பப்படுகின்றன 
ஓராயிரம் வார்த்தைகள்.
பின் 
மௌனம் பழகும்  
ஒவ்வொரு பொழுதிலும் 
வார்த்தை சேர்த்து விளையாடும் 
சின்னக்கைகளுக்குள் 
சிறகு வளர்க்கின்றன 
பின்னொரு பொழுதின் 
கவிதைகள்...

,..

No comments: