Sunday, November 30, 2008

...

காலமற்றிருந்த நதியோடி
உருண்டிருந்த வாழ்வில் தொடங்கி
துப்பாக்கி தூக்கியலையும்
முரட்டுக்காலணி மனிதர்கள் வரை
கூழாங்கற்கள்
பார்த்திருந்தது ஏராளம்.

மோதி வீழ்ந்து
விறைத்திருந்த முனைகள் ஒடிந்து
மென்மை பழகி
இசைவயப்பட்ட
அவற்றின் ஒற்றைப்பாடம்
எவருக்கும் புரியாமல் போவதையும்
இனி
பார்த்திருக்கக்கூடும்.

1 comment:

கவின் said...

என்னடா இது........