Sunday, November 30, 2008

...

மறுகரையில் இருப்பதாகச்சொல்லி
செய்தியனுப்புகிறாய்.

நம்மிடையே நதியோடியிருந்த
காலம் போய்
வெகுநாட்களாகிவிட்டது.

இப்போது நான் வந்து நிற்கும்
கடலுக்கு
எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள்
என்று
யாருக்குத்தெரியும்?

1 comment:

கவின் said...

ரைட் விடு.