Monday, November 24, 2008

...

எழுதப்படாத கவிதையின்
முதல் வரி போல் அமர்ந்திருக்கிறாய். 
முதல் பார்வையில்
தொடங்கிய பயணம்
முற்றுப்பெறாமல் நீள்கிறது.  
எங்கெங்கோ அலைந்து
வருமிக்காற்று, 
உறைந்து நிற்கிறது
நம்மிடையே.
உருப்பெற்று முழுமை பெறட்டும் 
உன் புன்னகை. 
சேருமிடம் பற்றிய கவலையற்று
சிதறிக்கிடக்கிறதென்
காலம்.