Thursday, October 1, 2009

முதல் மழை இரவு

கட்டங்கள் உருள
பகடைகளில் நகர்ந்து
ஏணியில் இறங்கி
பின்
பாம்பின் வால் வழி ஏறி
அதன் வாயடைந்து நிற்கையில்
பார்க்க நேரிட்டது
விஷம் தொக்கி நிற்கும்
பல்லொன்று.
இனி பரமபதம் அடைவதை
தள்ளி வைத்து
என்ன ஆகப்போகிறது.

.,