Monday, October 5, 2009

கதை சொல்லல்

ஆளுக்கொரு கதை சொல்லி
அதை உண்மைக்கு அருகில்
நிறுத்தப் பார்க்கிறோம்.

உண்மையோ
ஏதொன்றிலும் நிலைபெறாமல்
அலைந்து திரிகிறது.

நிற்க வைத்த கதைகள்
நின்றபடி இருக்க
ஒருபொழுது மறுபொழுதாகையில்
ஒரு வாழ்க்கை தூரம்
தள்ளி நிற்கும் உண்மை.

நாம் சொன்ன கதைகளைப்
பிறர் நம்புவதைக் காட்டி
நம்மையும்
நம்பச்சொல்வார்கள் இனி.

கதைகளின் வாசனை
நிரம்பி நிற்கும் வெளியில்
உண்மையைப் பற்றிக் கவலைப்பட்டு
என்ன ஆகப்போகிறது.

1 comment:

Sakthi said...

கதை கதையாம் காரணமாம்.. நல்ல karu..