Thursday, June 17, 2010

. . .

இலையுதிர்கால போதிமரம்.
அடர்த்தியற்ற கிளைகளுக்கு கீழ்
கண்மூடி அமர்ந்திருந்தார்
புத்தர்.
உதிர்ந்து வீழும்
இலைகளில் ஒன்றாய்
கீழ்விழக் காத்திருந்தது
ஞானம்.
'இங்க உக்காந்திட்டு
என்ன மயிரைப் புடுங்கறான் இவன்?'
என்று
யோசிக்கத்துவங்கியது
மரத்தின் மேல்
அமர்ந்திருந்த காகம்.
விழுதல் ஞானமெனில்
பறத்தல்
வி
டு
லை.

No comments: