Wednesday, June 16, 2010

இன்னும் சில ...

இந்த முறை நீ வந்தமர்ந்த கிளையில்தான்
பூக்கத்துவங்கியது
வசந்தத்தின் முதல் பூ
இன்னும் காலமிருக்கிறது
இலையுதிர்காலத்திற்கு

,..


நீ மறந்ததாய் சொன்ன வழியின்
முடிவில் இருக்கிறது
என் வீடு

,..

எந்தத் திருப்பத்திலும்
உன்னை எதிர்பார்க்கலாம் என்றாய் ...
திரும்பிப்பார்த்தபடி நடக்கிறேன்...


,..

நீ உட்கொள்ள உட்கொள்ள
உயிர்த்தெழுகின்றன என் வார்த்தைகள் எல்லாம்.
அடுத்த மழை பெய்வதற்கு முன்
நட்டு வைக்கிறேன்
உன் அத்தனை பார்வைகளையும்.


,..

எதைக்கேட்டு எதைப்பெறுவதென
நமக்குள் குழப்பம் வர,
இரு விரல் நீட்டி ஒன்றைத்தொடு என்கிறாய்...
ஒளிரும் உனது இரு விரல்களில்
ஒளிந்திருக்கும் இரவை
எனக்குத் தந்து விட்டு
நீ பகல் கொள்ளைக்காரியாய் மாறிவிடு...


,..

No comments: