Monday, February 22, 2010

எந்தக்கணத்தில் தங்கிநிற்கிறது
நம்மைப் பிரித்து வைத்த
மௌனம்.
அதைத் தெரிந்து கொள்ளும்
கணத்திலேயே
மறந்து போகலாம்
நாமிது வரை
கற்றுக்கொண்ட
அத்தனை மொழிகளும்.