Thursday, September 18, 2008

...

உள்நிறையும் வார்த்தைகளில்
ஒளிந்திருக்கிறது உன் புன்னகை.
கைவல்யக்கனவுகளின்
நிறம் மங்கும் பொழுதினில்
நீயிருப்பதை
நினைவு கொள்கிறேன்.
உனைப்பிரிந்த வார்த்தைகளுக்குள்
முடங்கிக் கிடக்கிறதென் காலம்.
காலமற்றிருப்பதன் சுகவாழ்வு
இன்னமும் வசப்படவில்லை.
உனது மொழி திறப்பதற்கானவென்
காத்திருப்பு
காலத்திற்குள் நிகழ்கிறதா
அல்லது வெளியிலா
எனக் கவலைப்படுகிறாய்.
நீ தெளிவுறுவதற்கான மொழியை
இப்பொழுதுதான்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
பின்
மொழியறிந்து
மொழிதிறக்கும் முதற்கணத்திலேயே
கற்றுக்கொள்வோம்
மொழியின் அமைதியையும் ...