Wednesday, May 8, 2013

நிலை மயக்கம்

நிலா தெரியாத இரவில் 
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.
பின்
நிலவு தெரிந்த பொழுதில், 
எண்ணி முடித்த 
நட்சத்திரங்களைப் பறித்து
நமது தோட்டத்தில் 
நட்டு வைத்தோம்.
விரிந்து நிற்கும் 
நட்சத்திரங்களின் வாசத்தில் 
மயங்கி நின்றது 
நிலவும்.

,.. 

No comments: