Tuesday, May 21, 2013

நிலவு-மரம் ...

மழை நின்ற இரவின் 
தெளிந்த வானம்.
மேகங்களில் இருந்து
வெளிவந்த நிலவை
மறைத்து நிற்கிறது
முன் நிற்கும் மரம்.
இலைகளினூடே தெரியும்
நிலவைப்பார்த்து
மரத்தில் முளைத்ததா
நிலவென்கிறாய்.
பின்,
அமைதியாய்ப் புன்னகைக்கும்
என் கைகளைப் பற்றிக்கொண்டு

'இல்லை, நிலவில் முளைத்திருக்கிறது மரம்'
என்றபடி
நீயும் புன்னகைக்கிறாய்.
என் வெளியெங்கும்
நிறைகிறது
நிலவு-மரம்.

,..

No comments: